பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

28

 கவியரசர் முடியரசன்


              ஏன் சிரித்தான்?

அண்டப் பெருவளியில் ஆடிச் சுழன்றுவரும் - και ανωφύ பெருவடிவம் உற்றதொருt பூதலத்திற் 円 பற்றிப் ப்டர்ந்துபகை யாகவரும் பாழிருட்டு முற்றத் தொலைந்ததென முன்சாமக் கோழிசொல, மொட்டு முகமவிழ மொய்த்துவரும் வண்டினங்கள் சொட்டும் நறவருந்திச் சொக்கிஇசை பாடிவரக் கூடுறையும் புள்ளினங்கள் கவிக் குரலெழுப்பிப் பாடுபட எங்கும் பறப்பனபோல் சுற்றிவரக், கோலப் புரவியினக் கூட்டம் அணிவகுத்தாற் போலக் கடலலைகள் பொங்கிப் படர்ந்துவரச் செம்மை எனும்நிறத்தைச் செந்தழலிற் போட்டுருக்கி வெம்மை தணித்து வெளிவானக் கீழ்த்திசையில் பூசி மெருகிட்டுப் பொங்கும் எழில்பரப்பித் தேசு மிகவாகச் செந்நிறத்தை மேற்பாய்ச்சித் தங்கத் தகடொன்று தன்னந் தனியாகப் பொங்குங் கடலகத்துப் பூத்துக் கிளம்புதல்போல் தோன்றும் இளங்கதிரோன் தொல்லுலகில் பொன்னொளியை கான்று தகதகக்கக் கண்களிக்கச் செய்துநின்றான்; ஒய்ந்திருந்த இந்த உலகத்தை வாழ்விக்கப் பாய்ந்துவரும் அந்தப் பகலவனைச் சூரியனைப் போற்றி வணங்குதற்கும் பூவெடுத்துத் துவுதற்கும் ஏ ற்ற இருகைகள் இல்லா திருக்கின்றோம்;