பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

45

 கவியரசர் முடியரசன்


                 அறத்தின் வழிகாட்டி

வள்ளுவனை வழிகாட்டி என்று பாட

    வன்பாகக் கைகாட்டி விட்டார் நண்பர்; 

தெள்ளுதமிழ் நாவலனை உளத்திற் கொண்டு

    சிந்தனையாம் பேருலகம் நோக்கிச் சென்றேன்;

துள்ளுநடை போடுகையில் வழியி ரண்டு

   தோன்றுவதைக் கண்டங்கே மலைத்து நின்றேன்;

தெள்ளியநல் வழிஎதுவோ? என்று நெஞ்சம்

   தெளியாமல் இருவழியும் நோக்கி நின்றேன்.

வடக்குவழி தெற்குவழி என்றிரண்டுள்

   வடவழியில் புகத்துணிந்தேன் வாடைக் காற்று

நடுக்கியது மனம்வெறுத்துத் திரும்பி விட்டேன்;

   நல்வழியாம் தென்வழியில் நடந்து சென்றேன்;

நடக்கையிலே மணத்தோடு தென்றல் வந்து

   நலந்தரலால் புலமெல்லாம் மகிழக் கண்டேன்

கடக்களிறு போல்நடந்தேன்; அவ்விடத்தே

   கலகலவென்றொருசிலர்தாம் சிரிக்கக் கேட்டேன்.