பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

75

 கவியரசர் முடியரசன்


    வள்ளுவர் இன்று வந்தால்...?
    

நெல்வேலிச் சீமைபெறும் நீள்புகழைச் சொல்வதெனில் சொல்வேலிக் குள்ளடங்காத் தொன்மைச் சிறப்பாகும்; சங்கத் தமிழ்சொல்லும் தண்பொருருை பாய்வதனால் பொங்கும் வளத்துடன்சேர் பூமி யிதுவாகும்; செந்தமிழைத் தென்றலுடன் சேர்த்து மகிழ்ந்தளிக்கும் சந்தனங்கள் சூழ்பொதியச் சாரல் திருநாடாம்; செப்பு:புகழ் இப்பதியில், சேர்த்த திரவியமாம் ஒப்பில் தனந்தந்து கல்விப்பா லூட்டுதலால் நற்றாயும் ஆனவர்பேர்நாட்டிவருங் கல்லூரி பெற்ற பெருமைகளைப் பேசி மகிழ்கின்றேன்; அன்றிங்கு வெள்ளையரின் ஆட்சிதனை ஒட்டுதற்கு ஒன்றிவரு காதலினால் நின்றுகலம் ஒட்டியவர் மிக்குவரும் நாட்டன்பு மேவியதால் வன்சிறையில் செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் கற்றஇடம், பாட்டை தெரியாமல் பாடுகின்ற போதுபுதுப் பாட்டை நமக்களித்த பாவலராய்க் காவலராய்ப் பாட்டுத் திறத்தாலே பாருலகைக் காத்தெனக்குப் பாட்டனென வந்தவராம் பாரதியுங் கற்றஇடம் ஆதலினால் இந்த அரங்கேறிப் பாடுதற்குக் காதல் மிகவுடையேன் கைகப்பி வணங்குகின்றேன்; வள்ளுவனென் றெல்லாரும் வாய்மணக்கச் சொல்கின்ற தெள்ளுதமிழ்ப் பேருடையான் தேர்ந்த புலமுடையான் அன்றிங்கு வாழ்ந்ததனால் ஆருயிர்க்கு முப்பால் நூல் ஒன்றிங்குத் தந்துவந்தான்; உண்மையில் இன்றுவரின்