பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

77

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம்  77  கவியரசர் முடியரசன்

வஞ்சிப்பாக் காண வருவோன்றன் கண்முன்னே வஞ்சிப்பாரன்றி வளர்பாக்கள் கண்டறியான்; பாட்டில் கலிஎன்னும் பாவகையைத் தேடிடுவான் நாட்டில் கலியே நடமாடக் கண்டிடுவான்; இவ்வண்ணங் காணுங்கால் ஏங்கி அழுதழுது செய்வண்ணம் யாதென்று சிந்தித் தலமருவான்; கண்ணிரை மாற்றக் கடவுளுறை கோவிலுக்குள் புண்ணிமை மாறுமெனப் போய்ப்புகுவன்; அங்குறையும் ஆண்டவன் தாள்மலரை அய்யன் தொடக்கண்டு 'திண்டாதே திண்டாதே தேவன் திருவடியை, எட்டி யிருந்தே இறைவனை நீ போற்றிடுக, தொட்டு வணங்குகிற தொல்லுரிமை நிற்கில்லை', என்ற குரல்கேட்பான், ஏங்கித் தொழுதபடி நின்ற கடவுள்முகம் நோக்கி நிலைத்திருப்பான்; என்னவிடை சொல்வான்* எழில்விடையன்? வள்ளுவற்கு முன்னர்ச் சிலையாகிக் மூங்கையென நின்றிருப்பான்; வாலறிவன் மூங்கையென*வாளாமை கொண்டுமறை: நூாலவற்கு மாற்றம் நுவலா திருப்பானேல் "செத்தான் இறைவனவன் செத்தே மடிந்துவிட்டான் அத்தா இறந்தனையோ? அய்ய'ஒ என்றழுவான்; "தெய்வஇசைப் பாட்டென்ற தேவாரத் தேனிருந்தும் செய்யதிரு வாய்மொழியாம் தித்திக்கும் பாலிருந்தும் தேன்சுவையும் பாலின் தெளிசுவையுங் காணாமல் கன்மனத்தர் செய்த கொடுமைகளைக் கண்டேயோ?

"அகவல்,வஞ்சி,கலிமுதலியபாவகைகளும்நயம்படநவிலப்பட்டுள்ளன. எழில்விடையன்-காளை மீதமர்ந்த சிவன், மூங்கை-ஊமை,வாளாமை பேசாமை,மறைநரலவர்க்குதமிழ்மறையாகியநூலைத்தந்தவள்ளுவர்க்கு