பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

81

 கவியரசர் முடியரசன்


                 நடை பயில்வோம்

வையத்து மாந்தரெலாம் வாழும் முறை தெரிந்து உய்யத்தான் ஒதி ஒருநூலைத் தந்தமகன்; பேராழி சூழுலகிற் பேதைமையாம் பாழிருட்டைப் போராடி நீக்குதற்குப் பூத்துவருஞ் செங்கதிரோன்; உள்ளமெனும் பைங்கழ்கள் ஓங்கித் தழைத்துவரத் தெள்ளமுதம் பாய்ச்சிச் சிரித்துவருந் தண்ணிலவு; பற்றிப் படர்ந்துருமைப் பாழ்செய்யும் நோய்க்குணங்கள் முற்றத் தொலைக்க முளைத்துவரும் நன்மருந்து: கற்றோர் மனம்பூத்துக் காய்த்துக் கனிகுலுங்க வற்றாப் புனல்சுரந்து வாழ்வளிக்கும் பேராறு; வெண்முத்துச் செம்பவளம் வேண்டியமட் டுங்கொடுத்து மண்ணகத்தை வாழ்விக்கும் மாண்புயர்ந்த பேராழி: மண்டி வருமாந்தர் மாசகற்றி நெஞ்சத்திற் கொண்ட பிணியகற்றும் குற்றாலப் பேரருவி, உள்ளத்தைப் பற்றி உலுக்கிவரும் வெப்பத்த ை மெள்ளத் தணிப்பதற்கு மேவிவருந் தென்றல்; அறிவுப் பசியால் அழுதிருக்கும் நம்மைப் பரிவுப் பெருக்கால்முப் பாலூட்டும் நற்றாய்; அறஞ்சொல்லி ஆன்ற பொருள்சொல்விக் காமத் திறஞ்சொல்லிக் காட்டித் தெளிவிக்கும் பேராசான்; ஈராயிரத்தாண்டின் முன்னே எழுந்ததொரு பேரா மலைநிகர்ப்போன் பேரறிஞன், அன்னவன்தான்