பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

89

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 89 6 கவியரசர் முடியரசன் உலகத்துப் பாவலரைத்தமிழகத்தின் ஒப்பரிய நாவலரை, உலக வாழ்க்கைக் கலைவகுத்த புலமைமிகும் கலைஞர் கோவைக், கற்றுணர்ந்த அறிஞர்க்குள் அறிஞர் தம்மைச், சிலைவடித்த திருவுருவில் நிலைத்து நிற்கும் சிந்தனையிற் பெரியாரை, நுழையும் நுண்மாண் புலமிகுத்த வள்ளுவரைத் தில்லிக் குள்ளே புகழ்பரவக் குடியேற்றி வைத்தோர் வாழ்க. தலைவைத்த பனியுறையும் மலையின் மீது தமிழ்மாந்தர் மறங்காட்ட நாணிற் பூட்டும் சிலைவைத்தார் அன்றிருந்தோர்; உலகுக் கெல்லாம் செந்தமிழின் அறங்காட்ட வள்ளு வற்குச் சிலைவைத்தார் இன்றிருப்போர்; உலகம் உய்யச். சிந்திக்கும் பேராசான் சிலையை நாட்டி நிலைவைத்தார் தமிழ்த்தாயின் கோவிலுக்கு: நெஞ்சத்துக் களிப்பேறி வாழ்த்துகின்றேன். ミ* Sof o: o: So o: ఫిఖీ ఫిఖీ ఫిఖీ ఫిఖీ ఫిఖీ ఫిఖీ