பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை † தவர். இம்மூவரும் தனித்தனி ஒரு நூலே ஆக்கி யருளினர். அந்நூலை . அன்றி ஒரு பாடலேனும் வேறு பாடினால்லர். ! தமிழின் இணையற்ற பெரு நூல்கள் மூன்றனுள் ளும் முத ன் ைம சான்றது தெய்வப் புலவர் அருளிய திருக்குறளே என்பதை இயம்பவும் வேண் டுமோ ? இந்நூலை முறையாகக் கற்கவேண்டும் என்ற பேரார்வம் தமிழரிடையே இன்று பெருகியிருக் கிறது. அக்காரணத்தால் வள்ளுவரை ஒரு சிறிது கற்ற எளியேற்குப் பத்தாண்டுகளாகத் தொடர்ந்து திருக்குறள் விரிவுரையாற்றும் பேறு, நெல்லேயில் ல்ெலியப்பர் திருக்கோவிலிலும் தருமையருள் பெறு - அருணகிரிக் கழக மன்றத்தினும் வாய்த்தது. . அதன் பயனுகவே வள்ளுவர் சொல்ல முதம் என்னும் இச் சின்னூல் உருவாயது. வள்ளுவரைப் பல வடிவில் பலர் வாயிலாகக் கண்டு மகிழும் தமிழுலகம் இதனை யும் ஏற்றுப்போற்றும் என்னும் உறுதியுடையேன். எளியேன்பால் அமைந்த ஒருசிறு எழுத்து வன்மையையும் பழுத்துக் கனியுமாறு செய்ய வேண்டும்; அதன் பயனேத் தமிழர் துய்க்குமாறு செய்யவேண்டும் என்ற பெருவிருப்பால் என்னைப் பலகால் நூல்கள் எழுதுமாறு ஊக்கிவரும் தமிழ்ப் பெருங்காவலராய கழக ஆட்சிப் பொறுப்பாளர் உயர்திரு. வ. சு. பிள்ளேயவர்கட்கு என்றும் மாருத நன்றியுடையேன். - தமிழ் வெல்க! அ. க. நவநீதகிருட்டிணன்.