பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன. சொல்லும் செயலும் மக்கள் உள்ளத்தே உருவாகும் எண்ணங்கள். சொற்களாக வெளிப்படுகின்றன. உறுதியான எண் னங்கள் செயல்களாக உருவடைகின்றன. உள்ளத் துய்மையை உண்மை என்பர். வாயால் சொல்லும் சொற்களின் தூய்மையை வாய்மை என்பர். மெய் யால் செய்யும் செயல்களின் துய்மையை மெய்ம்மை என்பர். இங்ஙனம் உண்மை, வாய்மை, மெய்ம்மை என வழங்கும் மூன்று சொற்களும் சான்ருேரின் ஆன்றமைந்த அரிய பண்புகளை விளக்குவனவாகும். வடமொழியில் வழங்கும் சத்தியம் என்ற சொல் லேத் தமிழர் மூன்று சொற்களால் குறித்ததன் கருத்து உய்த்து உணரற்பாலது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்று கருவிகளும் ஒற்றுமைப்பட்டுப் புரியும் செயலே வெற்றிபெறும் என்பதை அச் சொற் கள் விளக்கி நின்றன. -

  • சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்’ என்று வள்ளுவர் சொல்லுவார்; வாய்ச்சொல்லில் வீரர் ஆகிய சிலர் எதனையும் எளிதாகச் சொல்லிவிடு வர். அதனைச் செயலில் கொணர இயலாது திகைப் பர். ஆதலின் சொல்லிய வண்ணமே திண்ணமாக, செயலைச் செய்து முடிக்கும் உறுதியான எண்ணம் எல் லோருக்கும் வேண்டுவதாகும். சொற்கள் இனியன என்றும் இன்னதன என் றும் இருவகைப்படும். இன்னச் சொல்லே நான்காகப்