பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினஒல் குணமும் - 翼? ஓங்கிய கை நிற்பதில்லை. தரையில் ஓங்கி அறைந்தவன் தை, அத் தரையில் படுவது தப்பசதின்ருே அது போன்றே சினமுடையார் வலியிழந்து நலிவதும் தப்பாது. சினத்தை என்றும் மனத்தில் தினையாதவன் பெற விரும்பிய பேறுகள் அனைத்தும் ஒருங்கே பெறுவான். அவனது உள்ளம் அருள் வெள்ளம் பெருகுவதற்கு இடமாகும், அருள் நெஞ்சம் படைத்த அந்த ஒளன் இந்த உலகில் மட்டுமன்றி மறுமையிலும் பெருமையுறுவான். இறுதியில் வீடுபேறு எய்துவா என்ருே பல கொள்ளிக் கட்டைகளை ஒன்று சேர்த்துக் கொண்டு வந்து உடம்பில் சுட்டால் போன்ற பெருத் துன்பங்க்ளை அடுக்கடுக்காக ஒருவன் செய்தானுயின், அவன்மீது சினம் சிறிதும் கொள்ளாது இருத்தல் கூடுமோ ? எவர்க்கும் எளிதில் கூடாத செயல் இஃது என்பதை வள்ளுவர் ஒப்புக் கொள்ளுகிருர், அது கூடுமாயின் நன்று என்று நவில்வார். இனரெரி தோய்வன்ன இன்னு செயினும் புணரின் வெகுனாமை நன்று' என்பது வள்ளுவர் சொல்லமுதம். சைவசமய குரவர் தால்வருள் ஒருவராகிய நாவுக் கரசர் இளமையில் சைவராயிருந்தவர். பல சமய நூல் களையும் ஓதி உணர்ந்தார். சமண் சமய சாத்திரங்களைப் பெரிதும் பயின்றதன் பயணுய்ப் பாடலிபுத்திரம் என்னும் பதி புகுந்து சமணராயினர். அவரது சமண் சமயப் பேரறிவினைக் கண்ட வல்லார்க்ள் தருமசேனர் என்ற பட்டமளித்துச் சமண் குருவாகத் திகழுமாறு செய்தனர். சமணம் புகுந்து அச்சமய குருவாகவும் நாவுக்காசர் விளங்குவதை அறிந்த அவர்தம் தமக்கையார் திலகவதி யம்மையார், பரசமயப் படுகுழியில் விழுந்த தம்முடைய தம்பியைச் சைவக்கரையேற்ற வேண்டுமெனச் சிவனே அல்லும் பகலும் வேண்டி வழிபட்டார். அதன் பயணுகத் வ, சொ. !!-ே