பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - jo # 令 உழிவும் உகாவும் 恶 ஒ 莎 விரும்பிக் கொடுப்பர் ; உழவர்தம் கை அத் தொழிலைச் செய்யாது மடங்குமாயின் முற்றும் துறந்த முனிவர்க்கும் அவ் அறத்தில் நிலைத்து நிற்கமுடியாது. இங்கனம் உழவர்களின் உயர்வை அழகுற விளக்கியருளினுள். கவியரசராகிய கம்பர், வேளாளர் பெருமையை விளக்குதற் கென்றே ஏரெழுபது என்னும் நூலேப் பாடியருளிஞர். வேளாளர் குல விளக்காய்த் திகழ்ந்து தம்மைப் பேணி வளர்த்துப் பேராதரவு நல்கிய பெரு வள்ளலாகிய சடையப்பரைத் தமது காவியத்தில் தக்க இடங்களில் வைத்துப் பாராட்டும் கம்பன் வேளானரோ என்று ஐயுறுவாரும் உண்டு. அவர் வேளாளரே என அறுதியிட்டு உரைத்தவரும் உளர். இராமபிரானுக்கு மணிமுடி புனேயும் மங்கல நாளில் வெண்னேய் நல்லுரர்ச் சடையப்பரது மரபினர். தமது கரத்தால் மணிமுடியினே எடுத்துக் கொடுக்க, வசிட்டன் வாங்கி இராமனுக்குச் சூட்டினுன் என்று சொல்லி மகிழும் கம்பர், உழவர்க்கு எத்துணை உயர்வு கொடுத்திருக்கிருச் ! அவர் பாடிய ஒரெழுது என்னும் நூலில் ஏருழவர் ஏற்றத்தை எழுபது பாக்களால் இனிது விளக்குகின்ரும். உலகம் உய்யப் பிறந்தவர்கள் உழவர்களே. அளவிலாத கல்களே ஆய்ந்தாய்ந்து கற்ருலும் உணவிற்கு உழவர் வீட்டு வாயிலில் சென்றன்ருே நிற்க வேண்டும் ! வேலேந்திய வேந்தருடைய வெற்றியெல்லாம் தாற்றுக் கோலேந்திய வேளாளர் சிறப்பாலன்ருே விக்ாவன : வானம் மழை பொழிந்தாலும், நிலம் வளம் தருவதற்கு உழவர்களன்ருே உள்ளம் கொள்ளவேண்டும் வேதமும் வேள்வியும் கலேகளும் கவிதைகளும் செல்வமும் செழிப்பும் நீரும் நேர்மையும் ஆகிய எல்லாம் உழவாலேயே