பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அள்ளுவச் சொல்லமுதம் அதனைக் கூறியருளும் பேறு எனக்கு வாய்க்குமாயின் இதைவிடப் பிறிதொரு தவப்பயன் உளதோ ? எனக்குத் தந்தையும் தாயும் நீரே கட்டளையிடுக ! பணியினைத் தலையால் செய்யக் கசத்திருக்கிறேன்' என்று இராமன் மறுமொழி இயம்பின்ை. உடனே கைகேயி, 'கடல் சூழ்ந்த இவ் உலக மெல்லாம் பரதன் ஒருவனே ஆளவேண்டுமாம் ; நீயோ தாழ்சடை தாங்கித் தவக்கோலம் பூண்டு, கானகம் புகுத்து, புண்ணிய கதிகள் படிந்து, ஏழிரண்டு ஆண்டுகள் கழித்து மீளவேண்டுமாம் ; இங்கனம் இந்த நாடாளும் அரசர் கட்டனே பிறப்பித்துள்ளார்' என்று மிகவும்

றi:பட உரை த ள.

தசரதன் தாங்கமுடியாத பெரும்பாரத்தைப் பரதன் அயில் சுமத்திவிட்டான் என்ற தோன் ஜமாறு கைகேயி தி சுமதி: து தோன்று மாறு: யைப் பேச வைத்த கம்பர் திறத்தை என்னென்பது : கைகேயியின் மொழியினைக் கேட்டு இராமன் இதயம் கலங்கவில்லே. எல்லையற்ற இன்பமே அடைந்தான். அவன் அடைந்த துன்பத்தின் அளவை இப்பொழுது என்னைப் போன்ற கவிஞரால் கணக்கிட்டு இயம்புதல் இயலுமோ ! என்று கவியரசராய கம்பர் பெருமானே வியத்துரைப்பாராயின் துன்பத்தையும் இன்பமென வரவேற்ற இராமனது உயர்பண்பை என்னென் அரைப்பது ! 'இப்பொழு தெம்ம னுேரால் இயம்புதற் கெளிதே யாரும் செப்பரும் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி தோக்கில்