பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登臺 வண்ணுவர் சொல்லமுதம் முகமலர்ச்சியுடன் வரவேற்பர். தம்பால் உள்ளன வற்றைக் கரவாது உள்ளுவகையுடன் ஈவர். எவர்க்கும் இன்சொல்லே வழங்குவர். எல்லாரும் எள்ளுதற்குரிய இல்லாரையும் அவர் எள்ளார். இந்தான்கு இயல்புகளும் தற்குடி மக்களின் இலக்கணம் என்றே வள்ளுவர் சொல்லுவார். நகையிகை இன்சொல் இகழமை நான்கு: வகையென்ப வாய்மைக் குடிக்கு” என்பது அவர் சொல்லமுதமாகும். இங்கனம் வள்ளுவர் வகுத்த இலக்கணத்தை நாலடியாள் சிறிது விளக்கமாக நவின்று வலியுறுத்தியது. நல்லினத்தாருடன் சேர்ந்தொழுகும் நலம், இன்சொல் இயம்புதல், வறியார்க்கு ஈதல், மனத்துய்மை என்னும் நல்லியல்புகள் எல்லாம் இற்பிறந்தார்க்கு இயல்பாய் அமைந்தன என்று காலடியார் விளக்கியது. ‘இனதன்மை இன்செனல்ஒன் மீதல்மற் றேனே மனதன்கை சன்திவை பெல்லாக்-கண்கணி மூத்தே டிமைக்கும் முழங்குவரித் தன் சேர்ப்ப ! இற்பிறந்தார் கண்ணே புள்' என்பது நாலடியார்ப் பாடலாகும். "பணம் பந்தியிலே குலம் குப்பையிலே' என்பது ஒ: பழமொழி. ஒருவனுக்குச் செல்வம் பெருகிவிடுமா? ஆடிப்பெருமை தானே வந்துவிடும் என்பர் சின் செல்வம் காரணமாக மற்றவர் கொடுக்கும் மதிப்பெல்லாம் போலியானவையே. தொன்றுதொட்டு வரும் தவத்தா லும் கல்வியாலும் முயற்சியாலுமே குடிப்பேருமை சிறப் புதுவதாகுக்.