பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வள்ளுவர் சொல்லமுதம் يَة منه مجة. இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்துகிடந்தான். இதனை ஏற்ற வாய்ப்பாக எண்ணிய கட்டியங்காரன், மன்ன னேக் கொன்று மாபெரு நாட்டைத் தானே கட்டி யாளத் திட்டமிட்டான். அங்கனமே அரசனையும் கொன்முெழித்தான் என்று அவ்வரலாறு கூறும். பேராசிரியர் சந்தரம் பிள்ளையின் படைப்பாகிய மனேன்மணியத்தில் குடிலன் என்ருெரு அமைச்சன் பேசப்படுகிமுன். அந்நாடகக் காவியத்தில் வரும் பாண்டிய மன்னனுகிய சீவகனுக்கு வாய்த்த கொடிய அமைச்சன் குடிலன் ஆவான். அவன் பாண்டிய நாட்டு அரசாட்சியைப் பறித்துத் தானே அரசனதற் குத் திட்டமிட்டுப் பெருஞ் சூழ்ச்சிகள் செய்தான். இதனே உடனிருந்தே கூர்ந்து நோக்கிவந்த குலகுரு வாகிய சுந்தாமுனிவர் பாண்டியன் நலத்தைப் பாது காக்கும் பணியில் முனைந்து கின்று சிறந்த செய லாற்றினர். அதல்ை பாண்டியனும் அவன் குலக் கொழுந்தாகிய மனேன்மணியும் காக்கப் பெற்றனர் எனறு அககதை பகரும. - மன்னற்கு இடித்துரைக்கும் மதியமைச்சர் மாண்பை விளக்கவந்த முன்றுறையரையனர் என் அனும் முதுதமிழ்ப் புலவர் நல்லமைச்சருக்கு ஓர் உவமை கூறினர். பாலுண்ணுது ஓலமிட்டு அழும் குழந்தையை அலைத்துப் பாலூட்டும் தாயனேயர் நல்லமைச்சர் என்ருர் அப்புலவர். உலப்பில் உலகத்(து) உறுதியை நோக்கிக் குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல் மலைத்தழு(து) உண்ணுக் குழவியைத் தாயர் அலேத்துப்பால் பெய்து விடல்.’ என்பது அவர்தம் பழமொழிப் பாடலாகும்.