பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளுவர் சொல்லமுதம் அணுகாதும் நெருப்பில் குளிர்காய்வார் போல கின்று, நன்று விளக்கும் உறுதிமொழிகளே அரசற்கு இடித்துரைக்கும் கடன், அமைச்சரைச் சார்ந்ததாகும் என்று அறிவுறுத்தினர் தெய்வப் புலவர். அந்தக் கடனை அமைச்சர் ஆற்றுதற்குத் தயங்குவாராயின் அவ் அரசனது அழிவால் விளையும் பழியை உலகம் அவ்அமைச்சர்மீதேயே சுமத்தும். ஆதலின் அமைச் சர் கடமையை, - - அறிகொன்(று) அறியான் எனினும் உறுதி உழை இருந்தான் கூறல் கடன்." என்று தெளிவாக வலியுறுத்தினர். தமிழகத்தில் வழிவழியாகவே அமைச்சுரிமை தாங்கும் ஒருவகைப் பிராமண மரபினர் இருந்தார் போலும். அவர்கள் அமாத்தியப் பிராமணர் என்று அழைக்கப் பெற்றனர். அரிமர்த்தன பாண்டியன் என்னும் பாண்டி மன்னன் ஒருவனுக்கு முதலமைச்ச ாாகத் திகழ்ந்த திருவாகஆார் அமாத்தியப் பிராமணர் மரபில் அவதரித்தவர் என்று நூல்கள் அவலும். அவர் தமது அமைச்சுத் திறமையால் தென்னவன் பிரமராயன் என்னும் விருது பெற்று விளங்கினர். அவரே மாணிக்கவாசகராய் மாநிலம் உய்யத் திருவாசகம் அருளிய பெருமானவர். இரண்டாம் குலோத் துங்க கிைய அநபாய சோழனல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற தெய்வப் புலமைச் சேக்கிழார், வாக்கில் வல்ல வாய் மையாளர். தில்லைக் கூத்தன் திருவடித் தாமரையில் ஊறும் தீக்தேனைப் பருகும் வண்டு போன்றவகிைய மன்னன் அநபாயன், சமண காவியமாகிய சீவக