பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்காடு மாவட்டம், மயிலத்துக்கு மேற்கில் பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒளவையார்குப்பம் என்ற ஊரில், அவ்வூர்க் கணக்கு எழுதிவந்த திரு. சுந்தரம் பிள்ளை அவர்களின் மகனாகப் பிறந்தமையால் ஒளவை சு. துரை சாமிப் பிள்ளை என அழைக்கப்பட்டவர். மகாவித்துவான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள் எங்கே, இவர் எங்கே எனச் சிலநாள் இவரை மதிக்கா மலே இருந்த மாணவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒளவை அவர்களின் பாடம் நடத்தும் முறை புதுமை யானது அன்று நடத்தவேண்டிய பாடத்திற்கான குறிப்புகளை முன்பாகவே தேர்வு கொண் டல்லது பாடம் எடுக்கமாட்டார்; பாக்களை இசையோடு பாடுவார் ; சொல் பிரித்து பொருள் விளங்கப் பாடுவார்; புதிய பாடம் எ டுத்துக் கொள் வ தற்கு முன்னர் பழைய பாடத்தை மாணவர் எந்த அளவு புரிந்துகொண்டுள் ளனர் என்பதை அறிந்துகொள்ள சில பல கேள்விகளை கேட்பார். அம்முறையில் ஒருநாள் அரிச்சந்திர புராணத் தில் வரும் 'அவமேபுறம் அறைந்தமை” என்ற தொடரில் வரும் 'அறைந்தமை" என்ற சொல் லுக்குச் சொல்லிலக்கணம் கூறுமாறு கேட்டார். அது வரை இலக்கணம் என்றால், இலக்கணத்திற்குப் பாட மாக வைத்திருக்கும் நூலில் ஒரு பக்கம் இரண்டு பக்கங் களை ஒப்பிப்பதோடு சரி; அதனால் சொல்லிலக்கணம் என்பது என்ன எனப் புரியாமல் விழித்தோம். அவர் இடவழுவமைதி தனித்தன்மைப் பன்மை ’ என்பது தான் இதன் சொல்லிலக்கணம் என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. " இடமாவது, வழுவாவது, அமைதியாவது தனித்தன்மைப் பன்மை யாவது" என விழித்தோம். அதன்பிறகு, இவரிடம் நல்ல தமிழ் அறிவு இருக்கிறது என்பதை உணர்ந்து மதிக்கத் தொடங்கினோம். - 106