பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்பில் ஒருநாள் ' என்னிடம் தமிழ் கற்க விரும்பும் மாணவர்கள் எழுந்து நிற்கலாம் " என்றார், எல்லோரும் எழுந்து நிற்கவும். உடனே அவர் என் னிடம் படிப்பதானால், மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் ; அதற்கு ஒப்புக் கொள்பவர் மட்டுமே நிற்கலாம் என்றார். நான், மா. கந்தசாமி, வ. வேதபுரி, பி. குப்புராவ் ஆகிய நால்வர் மட்டுமே நின்றாலும், மாலையில் வீட்டிற்குச் சென்றோம் பணத் தோடு ; தமிழ் கற்க எந்த அளவு ஆர்வம் இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளவே, ஐந்து ரூபாய் சம்பளம் என்றேன். சம்பளம் எதுவும் வேண்டாம், தமிழ் கற்றுத் தருகின்றேன்" என்றார். வகுப்பு தொடங்கிற்று. திருவையாறு திரு. உலக ராதம் பிள்ளை அவர்கள் இயற்றிய கன்றும் கனி உதவும்" என்ற உரைநடை நூலைக் கொடுத்து, அதை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப் பணித்தார்". பாரி மகளிர் வரலாறு கூறும் சிறந்த உரைநடை நூல் இது. அது முடிந்ததும், “கார் நாற்பது", களவழி நாற்பது” என்ற எளிய பொருள் விளக்கம் பெறவல்ல, அதே நிலையில் ஆழமாகவும் பொருள் நிறைந்த நூல்களைக் கற்றுத் தந்துவிட்டுப் பின்னர் ஒருநாள் தொல்காப்பியம், சொல்லதிகாரம் சேனாவரையம், ஒருநாள் திருக்குறள் பரிமேலழகர் உரை எனச் சொல்லித்தந்தார். பாடம் தொடங்குமுன்: திருவிளங்கு பழமொழியும் சீர்விளங்கு புலவர் பலர் சிறப்பத் தோன்றி. சருவிளங்கு பாக்கள் பல உரைகள் பல ஆக்குதால் களவாம் வாய்ம்ை மருவிளங்கு தமிழ்மொழியின் மருங்கு எழுந்தது என விளங்கும் திருவிளங்கு வள்ளுவர் திருக்குறள் கண்டவர் அடியாய்ச் சிரமேற்கொள்வார். என்ற பாடலை எல்லோருமாகப் படுவோம். 107