பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1934-இல் பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும் அவர் தந்த பயிற்சியின் துணையால் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களை நானே படிக்கத் தொடங்கினேன். 1935இல் 'காவிரி" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்சங்கத் திங்கள் வெளியீ டாகிய 'தமிழ்ப் பொழிலு"க்கு அனுப்பினேன். அது வெளிவந்த பிறகே ஆசிரியர்க்குத் தெரியும். இதுவே என் எழுத்துப் பணியின் தொடக்கம். ஊரில் 'வாகீச பக்த ஜன சங்கம்” என்ற பெயரில் ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. அது மேலே கூறிய திருக்கோயில் திருவிழா நடைபெற்ற தைத்திங்களில் பத்துநாட்கள் உபயச் சொற்பொழிவு நடத்தி வந்தது. ஒளவை அவர்கள் பங்கு கொண்டதும், அது புதுநடை போடத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் உள்ளிட்ட பல சமயப் புலவர்கள் வந்து சொற்பொழிவு ஆற்றுவார்கள். அவர்கள் பேசியன எல்லாம் கேட்ட எனக்கும் நாமும் ஏன் பேசக்கூடது என்ற உணர்வு' எழவே, ஆசிரியர் அறிவுரையோடு" "சைவ இளைஞர் கள் முன்னிருக்கும் கடமைகள்" என்ற தலைப்பில் பேசினேன். அதுவே என் முதற் பேச்சு. - எங்கள் ஊரில் 'பானு கவி மாணவர் தமிழ்ச் சங்கம்" என்ற பிறிதோர் அமைப்பும் இருந்தது. கம்ப இராமாயணத்தை ஆழ்ந்து படிக்காமலே பட்டிமன்றம், வழக்காடு மன்ற மேடைகளில் நின்று கொண்டு வெறும் சொல் சாலம் காட்டுவார் போல் அல்லாமல் ஆழமாகப் படித்து 'வாலிவழக்கு" என்பன போலும் அரிய நூல்களைப் படைத்த அமரர் திரு. புரிசை முருகேச முதலியார் போன்றவர்கள் பானுகவியாரின் மாணவர்கள். அவர்கள் உருவாக்கியது அச்சங்கம். அதிலும் நான் பங்கு கொண்டவன்தான்; ஆண்டுதோறும் திருவத்தி 108