பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய இளைஞரின் நாகரீகம் எங்கே எனக் கேட்டு முடித்தேன். அடுத்து 'தந்தது உன்தன்னை; கொண்டது என் தன்னை" என்ற - திருவாசகத் தொடரை எடுத்துக் கொண்டு, தருதல் என்றால், கொடுப்பவன் தாழ்ந்து, வாங்கிடுவான் உயர்ந்து நிற்கும்போது ஆளவேண்டிய சொல், இங்கு 'தந்த உன் தன்னை' எனக் கூறியதன் மூலம், சிவனைத் தாழ்ந்தவனாகவும், தன்னை உயர்ந்த வனாகவும் மதித்துள்ளரே மணிவாசகர். இது ஏன் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டுப் பேச்சை முடித்துக் கொண்டேன். தலைமையுரையில், ஞானியார் அ வர் க ள் 'கோவிந்தன் பேசிய நேரம் சிறியநேரம் என்றாலும், என் சித்தனை க்கு மட்டுமல்லாமல் தலைவர் சிந்தனைக்கும் அரிய வேலை கொடுத்துவிட்டார்” எனக் கூறிப் பாராட்டினர். மற்றுமொரு நிகழ்ச்சி: நான் வித்துவான் பட்டம் பெறாத நேரம். ஆசிரியர்பால் பின்னர் தமிழ் கற்க வந்த கோமான் மா. வி. ராகவன் அவர்கள், அந்த ஆண்டு வித்துவான் தேர்வு எழுதியிருந்தார். அந் நிலையில், திருவத்திபுரத்திற்கு வருகைதந்த, எங்கள் ஆசிரியரின் ஆசிரியர் கரந்தைக் கவியரசு ஆர். வெங்கடாசலம் பிள்ளை அவர்கள், ராகவன் தேர்வில் நன்றாக எழுதியுள்ளார் எனக் கூறினார். அதுகேட்ட ஒளவை அவர்கள் என்னைச் சுட்டிக்காட்டி "இவன் அவனைவிடத் தெளிவாகப் படித்தவன்” என்று கூறிச் சென்றுவிட்டார். கவியரசு அவர்கள் என்னை அருகில் அழைத்து அனைத்துக் கொண்டு, இலக்கியத்திலும், இலக்கணத் திலுமாகச் சில கேள்விகளைக் கேட்டார். கூடுமானவரை 110.