பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைவரும் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா அணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முனைந்து விட்டனர். அதனாலும் பள்ளியில் என் பழைய தமிழ் ஆசிரியர் சென்ற அதே பள்ளியில் ஆசிரியராக 1942இல் சேர்ந்தேன் 1944 வரை பணி புரிந்தேன். அங்கும் தமிழ்ப்பணி தொடர்ந்தது. பி. ஒ. எல் தேர்வில் முதல் பகுதி. பி. ஏ. வகுப்பிற் குரிய ஆங்கில இலக்கியம் இரண்டாம் பகுதி. தமிழ் வித்துவான் தேர்வு. மூன்றாம் பகுதி. திராவிடமொழி ஒப்பிலக்கணமும், தென்னிந்திய வரலாறும் (ஆங் கிலத்தில்) இரண்டாம் பகுதியை முன்னரே படித்து விட்டேன். முதல் பகுதியையும் முடித்து விட்டேன். மூன்றாம் பகுதியில் தென்னிந்திய வரலாற்றுக்குரிய நூல் களாகிய திரு. நீலகண்ட சாஸ்திரியாரின் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, திரு. கோபாலன் அவர்களின் பல்லவ வரலாறு, பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு ஆகிய ஆங்கில நூல்களை வாங்கிக் கொண்டேன். கால்டுவெல் ஒப்பிலக்கணத்தை இலண்டனில் உள்ள தம் நண்பர் மூலம் வாங்கித் தந்தார் ஆசிரியர். அவற்றைப் படிக்கும்போது கால்டுவெல் ஒப்பிலக் கணத்தையும், பி. டி. எஸ். அவர்களின் தமிழர் வர லாற்றையும் தமிழில் மொழி பெயர்த்தால் பி. ஒ. எல். படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் 6Υ &ύ Τ' எண்ணினேன். - வேலூரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர், தாமரைச் செல்வர், அமரர் சுப்பையா பிள்ளை அவர்கள் சென்னையில், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தலைமையில் 22-2-42 இல் நடைபெறும் நற்றிணை மாநாட்டில் பாலை 113