பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு: 2 தமிழக அரசு வழங்குத் தமிழ்த் தென்றல் திரு. வி. க. விருது 25–8–1880 புலவர். கா. கோவிந்தன் அவர்கள் வட ஆர்க்காடு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் செய்யாற்றில் 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாள் திரு. காங்க முதலியார் அவர்களுக்கும். திருமதி சுந்தரம் அம்மையாருக்கும் பிறந்தவர். உரைவேந்தர் ஒளவை துரைசாமியவர்களிடம் தமிழ்க் கல்வி பயின்ற புலவர் அவர்கள் தம் ஆசாளைப்போலவே சங்க இலக்கியப் பெரும் புலமையும், சான்றாண்மையும் நிரம்பியவர். உலக ப் புக ழ் பெற்ற அறிஞர் கால்டுவெல் அவர்களின் ஒப்பரிய இலக்கண நூலாகிய திராவிட மொழிகள் ஒப்பிலக்கணத்தை மொழியாக்கம் செய்த பெருமையும், பி. தி. சீனுவாச அய்யங்காரின் தமிழர் வரலாறு எனும் பெரு நூலை இரண்டு தொகுதிகளாக மொழியாக்கம் செய்ததுடன் வரலாற்றுக் கருத்துக்களில் வழுவிய இடங்களிலெல்லாம் தமிழ்வளம் மிளிரச் செப்பம்செய்து வெளியிட்ட பெருமையும் புலவர் அவர்களையே சாரும். சட்ட மன்றத்தின் பேரவைத் துணைத்தலைவராகவும், பின்னர் தலைவாாகவும் பொறுப்பேற்றுச் சிறப்புறச் செயலாற்றினார். 1 16