பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கத்தில் தம்மையும் இணைத்துக் கொண்ட புலவர் அவர்கள், அன்றிலிருந்து முழுநேர அரசியலில் அடியெடுத்து வைத்தார். - 1936ஆம் ஆண்டில் 20வது வயதில் புலவர் அவர்கள் தம்முடைய மாமன் மகள் கண்ணம்மாவை மனந்தார். 1941 ஆம் ஆண்டில் அவர், வேலூர் நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்திய வேங்கடேசுவர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். அக்காலத்தில் புலவர் அவர்கள் பல ஊர்களுக்குச் சென்று இலக்கியச் .ெ சா ற் .ெ பா ழி வு க ள் ஆற்றிவந்தார். வித்துவான், பி. ஒ. எல். எம். ஏ. என்பன புலவர் அவர்கள் பெற்றுள்ள கல்விப்பட்டங்கள் ஆகும். அறிஞர் அண்ணா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, செய்யாறு நகரிலிருந்து வெளிவந்த போராட்டம் வார இதழில் புலவர் புலவர்கோ’ என்ற புனைப் பெயரில் இலக்கியக்கட்டுரைகளையும், கேஜி நளன்’ என்றபுனைப் பெயர்களில் அரசியல் கட்டுரைகளையும் புலவர் அவர்கள் எழுதியுள்ளார். 1962 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத்தேர்தலில் புலவர் அவர்கள் செய்யாறு தொகுதியில் வேட்பாளராகப் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நாட்களில் (1962-67) சட்டமன்றத்திலேயே மிகுந்த கேள்விகளை எழுப்பியவர் என்ற சிறப்பைப் பெற்றவர் நம் புலவர் அவர்கள். 1967 இல் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் அமைந்த தி. மு. கழக ஆட்சியில் சட்டப் பேரவையின் - துணைத்தலைவராகப் புலவர் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார். பின், புலவர் அவர்கள் 1969, பிப்ரவரி 22ஆம் நாள்