பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித வாழ்க்கை காட்டும் நூல் திருக்குறள். காட்டு நூல், உலக நால் என்று தமிழ்த் தென்றல் திரு. வி. க. மதிப்பிட்டுள்ளார்கள். இது சுருக்கமான ஆல்ை நிறைவான மதிப்பீடு' என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். முழுவதற்கும் கன்னெறி 'திருக்குறள் வீட்டு நூல், திருக்குறள், மக்கள் வாழ்க்கையை அகலமாகவும்: ஆழமாகவும் ஆராய்ந்து, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைக் கருத்துக்களே வழங்குகிறது. திருக்குறள் காட்டும் அறவழிகள், தனி மனித வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் வழிகாட்டுவதோடு அமையவில்லே. மக்கள் வாழ்வுக்குத் துணைநிற்கும் அடித்தளமாகிய சமுதாய வாழ்க்கையையும் கெறிப் படுத்துவன, குறட் பாக்கள்.