பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்கள் அனைத்தும் ஒரே வகையா? இல்லை. அவை ஆறு வகையின. ஓரறிவு உடையன ஈரறிவு உடையன; மூன்றறிவு கொண்டவை; நான்காம் அறிவைப் பெற்றவை; ஐந்தாம் அறிவையும் அடைந்தவை உள. ஆறறிவையும் பெற்றவர்கள், மக்கள் மட்டுமே. இதிலேதான் மக்கள் இனத்தின் சிறப்பு உள்ளது. தனிச்சிறப்பினை உடைய நாம் தனிச் சிறப் போடு வாழவேண்டும். மற்றவை போல், நாமும் வளர்ந்து, இருந்து, இறக்கமட்டுமா பிறந்தோம்? இல்லை. வாழப்பிறந்தோம் காம்.