பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 அத்தகைய அறிவுடைய மக்களே, மெய்யாக நம் பொருள். இதைக் குடும்பத்தினர் அனைவரும் உணர வேண்டும். மற்றவர்க்கும் உணர்த்த வேண்டும். உணர்ந்ததை செயல்படுத்த வேண்டும். அரசுகளும் இதை உணர வேண்டும். மாடு வளர்ப்பதிலே காட்டும் அக்கறை, மனிதர்கள்ை மனிதர்கள் ஆக்குவதிலும் இருக்கவேண்டும். இதையும் அதையும் செய்து குவிக்க எடுக்கும் முயற்சியும் முதலீடும், மனித வளத்தைப் பெருக்கு வதற்கும் திரும்புவதாக.