பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பொழிவாற்ற ஏற்பாடு செய்வோம். எங்த தலைப்பில் பேசச் செய்யலாம்? முடிகொண்டாரின், முடிவு வினவிற்கு பேச்சி முத்துவின் விடை இதோ! 'கம் திருக்குறள் பொதுமறை; பொய்யாமொழி: அது குறிக்கோள் காட்டும்; வாழ்க்கைக்கு வழி காட்டும். அயர்வினைப் போக்கி, ஊக்கத்தை ஊட்டி, உயர்வினைக் கொடுக்கும்; ஆகவே திருக்குறள் பற்றி வாரங்தோறும் சொற்பொழிவாற்ற, தக்கவர் ஒருவரை ஏற்பாடு செய்யுங்கள் தாத்தா.’ 'சரி, அப்படியே செய்கிறேன். இவ்வாண்டு முழுவதும் ஞாயிறு தோறும் குறள் விளக்கங்தர, காவலர் பாரதியை எற்பாடு செய்து விடுகிறேன்’ என்று உறுதி பூண்டார் காட்டாண்மைக்கார முடி கொண்டார்.