பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 என்று அழைப்பர். என்ன என்ன பால் என்று: அவாவுகின்றீர்களா? நல்லது சொல்கிறேன். அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகிய மூன்று: பெரும் பிரிவுகளே உடையது முப்பால் என்று அழைக் கப்படும் திருக்குறள். ஒவ்வொரு பெரும் பிரிவிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. உட்பிரிவுகளுக்குப் பெயர் அதிகாரங்கள். திருக்குறள் மொத்தம் நூற்று: முப்பத்து மூன்று அதிகாரங்களே உடையது. திருக்குறள் பொய்யாமொழி. எனவே காலத்தை வென்று கின்றது. தமிழர் காவில் நடமாடியது. தமிழ் ஏட்டில், இலக்கியத்தில், மலர்ந்து, மணம் பரப்பிற்று. எங்கெங்கோ இருந்து வங்த வெளிநாட்டவர் கண்டு மகிழ்ந்தனர். கருதித் திளைத்தனர். தாம் பெற்ற இன்பத்தை, தம் மொழியினருக்கும் அளிக்க எண்ணினர். தத்தம் மொழியில் திருக்குறளை பெயர்த்து வெளியிட்டனர். யாரும் தூண்டியல்ல; தற்றுாண்டலால் விளைங்தது, பல மொழிபெயர்ப்பு. இன்று, பைபிளுக்கு, குரானுக்கு, அடுத்தபடி அதிகப் படியான மொழிகளில் வெளியிடப்பட்டு போற்றப் படும் நூல், நம் திருக்குறள். ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது திறக்குறள்: எல்லா நாட்டவர்க்கும் எல்லா மொழியினர்க்கும்: எல்லாக் காலத்திற்கும் ஏற்புடைய அற நூலொன்று: கம் மொழியில் உள்ளது என்று பெருமைப்படுவ தோடு கிற்றல் ஆகாது. அங் நூலினக் கற்றுணர வேண்டும். கற்றலில் வளர்வதைப் போன்று, அதைப்