பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் கிறை ஆன்ருேரே! மானிடனுக்கு நேர்வழி-கல்வழி-இல்லறமே. இல்லறநெறி இயல்பான நெறி. அங்கெறி, தெளிந்த அன்பில், வாணிகக் குப்பைகள் கலவாத தெளிந்த அன்பில், தொடங்க வேண்டும்; அன்போடு வளர வேண்டும். அப்போது, அதன் விளைவு அறம் என்பதைக் கேட்டீர்கள். அதை, ஒரு காதிலே கேட்டு, மறுகாதிலே விட்டுவிடாதீர்கள். கேட்டதை நினைவில் நிறுத்துங்கள். கினேவில் கிறுத்தியதைச் சிங்தித்துப் பாருங்கள். ஆழ்ந்து சிங்தித்துப் பாருங்கள். பின்னர் ஒளி மின்னும். வாழ்க்கை வழியினேக் காட்டும் ஒளி மின்னும். இன்று இப் பேரவையில் கட்டிளங் காளையர் பலரைக் காண்கிறேன். அவர்கள், திருமணம் என்னும் சொல்லே தித்திக்கும் பருவத்தினர் அல்லவா? திருமணம் என்னும் சொல் எத்தனை கனவுகளை