பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

யற்ற அத்தகையோர்க்கு புறக்காட்சியால் கற் .பிக்கிரு.ர். s

வீட்டின் ஓர் மூலையில், பச்சைப் பசேரென்று .மாங்காய்க் குவியல். மற்ருேர் மூலையில் மாம்பழங்கள் சில. குழங்தையோ, காமோ எதை நாடுவோம்? கனியக் காத்திருப்பதைவிட, கனிந்து பயன்படப் .பக்குவமாகியுள்ள பழத்தையே நாடுவோம். இன்னத சொற்கள் கனியாத காய்கள். இனிய சொற்கள், அப்போதே மகிழ்வூட்டும் கனிகள். இதை .கினேவூட்டும் குறளைக் கேட்போம். இனிய உளவாக இன்னத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, இக் குறளை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள் வோம். இன் சொல்லைக் குறையாச் செல்வமாக்கிக் கொள்வோம். சிறுமையுள் நீங்கிய இன் சொல்லை, எங்கும் எப்போதும் யார் மாட்டும் கையாண்டு, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்.