பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போது , இது நல்ல எழுத்து இது பயனற்றது என்று மொத்தமாகக் குறிப்பிட்டாரே தவிர, விமர்சன ஆதாரத்தோடு, குறை நிறைகளை எடுத்துக் காட்டி அவர் விமர்சித்ததில்லை.

அவருக்கு விருப்பு வெறுப்புக்கள் மிகுதியாக இருந்தன. கதை ஆசிரியர்களின் பட்டியலில் வரும் பெயர்களை அவ்வப்போது அவர் மாற்றினார். ஒரு பட்டியலில் அவரே சேர்த்த சில பெயர்களை அடுத்த பட்டியலில் அவரே ஏன் நீக்கினார் என்பதற்குக் காரணமும் விளக்கமும் அவர் கொடுத்ததில்ன்ை. விமர்சனம் என்பதே அவரவர் விருப்பு வெறுப்புகளைக் காட்டுவது தான் என்று அவர் சொல்வார்.

க. நா. சு. ஆங்கிலத்திலும் தமிழ் எழுத்துக்கள் பற்றி கட்டுரைகள் எழுதினார். ஒன்றிரு சமயங்களில், ஒரே புத்தகம் பற்றி தமிழில் ஒரு அபிப்பிராயமும், ஆங்கிலப் பத்திரிகையில் வேறுவித அபிப்பிராயமும் எழுதினார். அதைச் சுட்டிக் காட்டியவர்களிடம், "ஒருவருக்கே இரண்டு அபிப்பிராயங்கள் இருக்கக் கூடாதா என்?ை’ என்று கேட்டார்.

தமிழில் வெளிவருகிற அனைத்தையும், புதிதாக எழுதுகிறவர்களின் எழுத்துக்களைக்கூடப் u೩೬54 ಹಹ க. நா. சு. சொல்வது வழக்கம். அவர் திறையப் படிக்கிறார் என்பது உண்மை, ஆனால், விருப்பு வெறுப்பு இல்லாமல் புதிய, புத்தகங்கள். To பல வருடங்கனாக எழுதிக் கொண்டிருப்பவர்கள், புதிதாக எழுதுகிறவர்கள்,

இ வாசகர்களும் விமர்சகர்களும் 基55