பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால அழகு வெள்ளி முளைப்பினிலே - அழகு துள்ளுது வான்பரப்பில் - சிறு புள்ளின. ஒசையிலே - அழகு பொங்கி வழியுதடி ! காலேப் பிறப்பினிலே - அழகு கண்ணேக் கவருதடி ! - சிறு சோலேக் கலகலப்பில் - அழகு சொரியுது உள்ளத்திலே ! சேவல் அழைப்பினிலே - அழகு சிந்தையை அள்ளுதடி ! - மன ஆவல் அழித்துவிட்டால் - அழ கானது நம்முடைமை ! தாமரை மொட்டுக்குள்ளே - அழகு தங்கிக் கிடக்குதடி ! - கதிர் சாமரை வீச்சினிலே - விரிந்து சஞ்சலம் போக்குதடி ! - வீடு துலக்கும்பெண்கள் - குளிர்முகம் வீசும் ஒளியழகில் - வான் நாடு விட்டுநகரும் - முழுமதி நாணி முகம்வெளுத்தே ! §