பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவர் செயல் ? செந்நெல் விளைந்ததுவும் திங்கரும்பு முற்றியதும் இந்நாள் எவர்செயலோ தோழி ? - நல் இன்பப் பரிதிசெயல் தோழா ! வாடை பனிக்காற்று வாய்இறுக்கும் ஊதைகுளிர் ஒடி மறைந்ததென்ன தோழி ? - உயிர் ஒம்பும் பரிதிசெயல் தோழா ! காடெல்லாம் பூப்பூத்துக் காய்கணிக ளேமுதிர்ந்து தேடி அழைப்பதென்ன தோழி ? - நாம் செம்பரிதி வாழ்த்துதற்குத் தோழா ! தாமரையில் சேல்புரளத் தாழ்வரைகள் எக்களிக்க காமடைந்த பேறென்ன. தோழி ? - தை நற்பொங்கற் பெருநாளே தோழா ! ஆடை திருத்திப்பொன் அணிதிருத்தி நம்பெண்கள் - பாடி மகிழ்வதென்ன தோழி ? - நற் பாற்பொங்கல் உண்டாடத் தோழா ! 5