பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 53 கவலை ஏனுே மனமே? வானே முட்டும் மலைமேல்: வந்து தழுவும் முகிலும்! மாண்நோக்கும் பிணையும்! மனமே கவலை ஏளுே? l ஒடை பூத்த அல்லி உன்னைக் கண்டே சிரிக்கும்! பேடைக் குயில்துணை கூவும்! பின்ஏன் கவலை மனமே? ? தேனை உண்ட வண்டும் தீந்தமிழ் இசைக்கும் யாண்டும்! வானத் தழகே அழகு! மனமே கவலை ஏனே? - 3 மணத்தை வாரித் தென்றல் வந்து வந்துனே அணைக்கும்! கணக்கில் லாத இன்பம்! கவலை ஏனே மனமே? - 4 ஆட்டுக் குட்டி தாயின் அருகில் துள்ளி ஒடும்! காட்டில் வழியா இல்லை! . கவல்ை ஏனே மனமே? 5 கயல்கள் பாயும் குளத்தில்! காளை முழக்கும் கார்போல்! வயல்கள் பச்சைக் காடே! மனமே கவலை ஏனே? - 6