பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வாணிதாசன் வளம்வாழும் மலைச்சாரல் மழைவற்றிப் போக மாத்தியின் கொடுமைமிகும் நாடறிந்த உண்மை! குளம்வாழும் தாமரைகள் நீர்வற்றிப் போகக் குணம்கெட்டு மனம்கெட்டு உயிர்த்கெடுதல் உண்மை! களம்வாழும் வீரனைப்போல் தமிழ்மொழியைக் காத்தாய்! காய்மறைக்கும் இலைநீக்கும் இலக்கணத்தின் பெற்றி உளம்வாழும் பெரும்புலமை இனியெவர்க்கே கிட்டும்? உனப்பிரித்தான் கொடுங்கூற்றம் யார்பொறுக்கக் கூடும்? 4 20–6–64 புதுவை இலக்கணச்செம்மல் திரு. குடிாரசுவாமி செட்டியார் நீத்தார் நினைவு மலருக்கு எழுதிய கையறு நிலைப் பாடல்