பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணத் தூண்டும் ஏடு திங்கள் செஞ்சுடர் போன்றுமே உலகின் கங்குல் போக்கிடும் சண்பகம் காண்போம்! இங்கு வாழ்ந்திடும் தென்னவர் எவர்க்கும் பங்கை நல்கிடும் பைந்தமிழ் வாழ்த்தே! அண்ணன் தம்பிகள் அன்பினை மறந்தோர் திண்ணைத் துரங்கிகள் செந்தமிழ் மறந்தோர் கண்ணை கற்றமிழ் காட்டியே மலர்த்தி எண்ணத் தூண்டிடும் சண்பகம் ஏடே! வாழ்ந்தோர் வாழ்ந்திட நல்வழி செய்யும்! தாழ்ந்தோர் தாழ்ந்ததன் காரணம் விளக்கும்! வீழ்ந்தோர்க் கென்றுமே மென் விரல் கொடுக்கும்! ஆழ்ந்தே சண்பகம் நல்கிடும் அறிவே! குறிஞ்சி நீள்மலைக் குன்றிடைப் பிறந்தே நிறைந்த மாமலர்ச் சண்பகம் நெடுநாள் மறைந்த மாத்தமிழ் கன்மணம் பரப்பிச் சிறந்து வாழ்ந்திடச் செப்புவம் வாழ்த்தே! வாழி தென்னவர்! வாழிய வாழ்கவே! வாழி தாயகம் வாழிய வாழ்கவே! வாழி தாய்மொழி! வாழிய வாழ்கவே! வாழி சண்பகம்! வாழிய வாழ்கவே! 蟲