பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

κκxix :ஊருக்கே உழைப்பதுவும் ஊர்வாழும் மக்கள் உயர்வுக்கே உழைப்பதுவும் கற்கவிஞர் வாழ்க்கை; தேருக்கே அச்சாணி திசைதிருப்ப முட்டு தெருவெல்லாம் கொடுப்பதற்குத் திரண்டதோள் வேண்டும் காருக்கே யார்சொன்னார் கடல்நீரை மொண்டு கழனியெலாம் வளமாக்க; காம்வாழும் காட்டில் நேருக்கு கேர்நடக்கும் அறிவற்ற செய்கை கெறிப்படுத்த என்பாடல் வழிவகுத்தால் போதும்! அந்தியிலே கோயிலெலாம் மணியடிக்கக் கேட்பேன் ஆனாலும் எனதுள்ளம் அமைதிகொள்வதில்லை சந்தியிலே கூடுகின்ற கூட்டம்போல் இன்றித் தமிழ்மக்கள் தாய்நாட்டின் நலம்பேண வேண்டும் பக்தியிலே தலைவாழை இலையிட்டே உண்போர் பசிமீறக் கையேந்திக் கெஞ்சுகின்ற ஏழை புந்தியிலே கிழலாடக் காண்கின்றேன் இந்தப் போக்கிற்கெலாம் என்பாடல் வழிவகுத்தால்போதும்! பாலுக்கே அழுங்குழவி பசிக்கேங்கு வோர்கள் பாயின்றி இடமின்றி கிழலுறங்கும் கூட்டம் நூலுக்கே வழியின்றிக் கைத்தறியால் வாழ்வோர். நுணலைக் கூச்சலிட்டால் பசிநீங்கப் போமோ? வேலுக்கே வேலெதிர்ப்பை விளைவிக்க வேண்டும் விரைவினிலே மக்கட்கு கல்லுழைப்பைத் தூண்ட தோலுக்கே உணர்வூட்டப் பகுத்தறிவை ஊட்ட துய தமிழ் என்பாடல் வழிவகுத்தால் போதும்!” என்பதுதான். இறுதியாக sts ஆள்வோரை வேண்டிக் சுேட்டுக் கொள்வதொன்றுண்டு. அதாவது,