பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒக்கும் பிறப்பு-ஒவ்வாச் சிறப்பு குறிஞ்சி : வான் எழுந்த பிள்ளைமதி மலைஎழுந்த நீளருவி! மலர்பூஞ் சாரல் தேன் எழுந்த வட்டஇறால் செழுமுகிலின் கருநிலவு! திகழும் உச்சி கூன் எழுந்த மலைத்தொடரில் குரல்கொடுக்கும் மழைக்களிறு கொல்லும் வேங்கை ஊன் எழுந்த பிறப்பொக்கும். ஒவ்வாத சிறப்பென்றே உணரு வோமே! முல்லை : புரிமுற்றி நீண்டிருக்கும் புதுக்கயிறு போற்கொடிகள் பூத்துத் தாவி உரிமுற்றிக் கவைக்கிளைகள் உயர்ந்திருக்கும் மரமேறும் ஒளிசேர் முல்லை வரிமுற்றிக் காண்குயிலும் வண்புறவும் பசுங்கிளியும் வாய்த்த மூச்சு சரிமுற்றி இருந்தாலும் . . தகுசெயலின் சிறப்பென்றாய்ச் சாற்றப் போமோ? .