பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is கடல்சூழ்ந்த உலகத்தில் கல்தோன்றி மண்தோன்றாக் காலம் தொட்டே உடல்சூழ்ந்த மனித இனம் உயிர்சூழ்ந்த பிறப்பொக்கும்! உண்மை உண்மை! அடல்சூழ்ந்த வெற்றியினை அடைந்தோர்கள் பலருண்டாம் ஆனால் என்றும் மடல்சூழ்ந்த மண்ணுலகில் மாப்புகழை அழியாமல் வளர்த்தார் வேறே! மொழிவகுத்தோர்.முன்னோர்கள் மூளுகின்ற ஒலியெல்லாம் முறையே செய்து வழிவகுத்தார்; ஒலிக்கேற்ற வரிவடிவை அமைத்திட்டார் மக்கள்; ஆனால் பழிவகுத்தார் சில்லோர்கள் பண்பில்லாக் கீழ்மக்கள்; படைப்பில் ஒன்றே! விழிவகுத்தார் துறைதோறும் மேன்மைபெறு வாழ்விற்கே மேலோர் ஆமே!