வாணிபுர வணிகன் (அங்கம்.3 பிறருக்கு நன்மை செய்த விஷயத்தில், பிறகு கான் எப்பொழுதும் துக்கப்பட்டே னில்லே, இப்பொழுதும் துக்கப்படப் போகிறதில்லே ஒன் ருய்ச் சம்பாஷித்து ஒன்ருய்க் காலம் கழிக்கும் அன்பு சமமாய் ஒருவர்மீதொரு வர் வைத்த சினேகிதர்களுக்குள், சாயலிலும் நடை யுடை பாவனேகளிலும், நற்குணத்திலும் சமத்வம் இருக்க வேண்டும்; ஆகவே இந்த அகந்தநாதர் என்பவர், எனது பிராணநாதருடைய அத்யந்த நண்பராயிருப்பதால், எனது பிராணநாதரைப் போலவே யிருக்கவேண்டு மென்று நான் எண்ணவேண்டியிருக்கிறது. அங்ஙனம் இருக்கு மாயின், என் உயிருக்குச் சமானமானவரை, கரகத்தின் குரூரத் தினின்றும் மீட்க, நான் செய்யும் காரியமெல்லாம் எவ்வளவு அற்பமானது! இது சற்றேறக்குறைய என்னையே நான் புகழ்ந்துகொள்வதாகும்; ஆகவே இனிவேண்டிாம் அதைப் பற்றி. வேறு விஷயங்களேக் கேளும் லீலாதரரே, என் னுடைய நாதன் திரும்பிவருமளவும், என் விட்டின் காரியங் களேயெல்லாம். உமது கையில் ஒப்புவிக்கின்றேன்; அவை களே யெல்லாம் ர்ே எஜமானனுய்ப் பார்த்து வாரும். என் வரையில், நீலகேசி ஒருத்தியை எனக்குத் துணையாகக் கொண்டு அவளது புருஷனும் எனது நாதனும் திரும்பி வருகிறவரையில், ஜகதீசனைக் குறித்துப் பூஜை செய் sgil விரதமாய் இருக்கவேண்டுமென்று, சுவாமிக்கு ஒரு பிரார்த் தனே செய்துகொண்டேன் இரகசியமாய். இதற்கு இரண்டு காத தூரத்தில் ஒருமடம் இருக்கிறது. அங்கு போய் நாங்கள் தங்கியிருக்கிருேம். எனது அன்பிலுைம், தற்கால அவசியத்தினுலும், நான் உம்மீது சுமத்தும் இவ்வேலையை நீர் மறுக்கலாகாதென வேண்டுகிறேன். நான், அம்மணி, கியாயப்படி நீர் எனக்கிடும் கட்டளைகளே யெல் லாம் நான் நிறைவேற்றுவேன், மனப் பூர்வமாய். எனது பரிஜனங்கள் 56ುಖ75 இவ் விஷயத்தில் என் எண் னத்தை அறிவார்கள் முன்பே ஆகவே என்து பிரான நாதருக்கும் எனக்கும் பதிலாக, உம்மையும் ஜலஜாவையும்
பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை