பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையே பிச்சை வாங்க அருவிருந் துண்ணலாமா? சாக்காடு துரத்தும்போது சந்தனம் பூசலாமோ? செல்வமும் சுகமும் தேடி சுதந்திரம் இழக்கலாமோ? குழந்தைகள் அழுகை கேட்டும் குறட்டையில் துரங்கலாமா? சுதந்திரப் போரின் வெற்றிச் சரித்திரம் அறியாப் பேய்கள் சுயநலத் துரோகக் கும்பல் சோம்பேறிக் கடையரெல்லாம் சிரிக்கின்ருர் என்றும் போல சங்கீதம் கேட்கின்ருர்கள் ஐயகோ காளி சக்தி அழித்திடு இவரையெல்லாம்!