பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெம்போரின் களங்கண்ட வீரர்களின் வெற்றிக்கு வம்பேதும் செய்கின்ற வீணர்களை நீர்கண்டால் செம்புருக்கும் தீயினிலே சுட்டெரித்து முடியுங்கள். சோம்பேறிப் பேச்சர்களை செவியறுத்துப் போடுங்கள். வண்ணத்திரு நாட்டை வாழ்வுதரும் தவநாட்டை எண்ணத்தில் எதை எண்ணி இங்கு வந்து எதிர்க்கின்ருன்?. உண்ணுதற்குத் தினியற்ற ஒட்டாண்டிச் சீனர்களை என்னருமை பாரதத்தில் ஏவுகிருன் சூ என் லாய்!