பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

وهو اللہ w، چه پايي ، به ث, اجم جي . . . . ..." ية من نيفية tة ي ، يعة இந்தபெரு நிலயெல்லாம் இருந்ததுவாம் ஒருகாலம் "சொந்தஊர் என்றதொரு சொல்லுக்கு அணிக்லமாம் அந்தஊர் ஆற்றுாரின் அழகுக்கு இணையாக . எந்தஊர் உண்டென்று ஏத்தியதும் ஒருகாலம்! சிறந்த செவிக்குரிய சிறப்பென்றுச் சொல்வார்கள் பறந்துவந்து சென்னைக்குப் பல்லாண்டு ஆனதுவால் அறிந்தவரே சொல்லுங்கள் ஆற்றுார் நலந்தானே! ஊருக்கு எதுபெருமை உங்களுக்கா தெரியாது! ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் என்பார்கள் நீரென்ன செய்கின்றீர் நீரமுத ஊற்ருன ஆறுகளைச் சாக்கடையாய் ஆக்கிவிட்டீர் நல்லவரே! ஆற்றைப்பரிசாக ஆண்டவளுர் தந்தாலும் ஊற்றை அடைத்ததுவோ உங்களது மந்திரமோ? காற்றைக் கனலுயிரைக்கடவுளது நற்பரிசை நாற்றப்படுத்துவதோ தம்மவரின் கைவரிசை! vii