பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்திரமும் சதுர்மறையும் சகலமகா வித்தைகளும் சாற்றவல்ல வேதியரின் சோற்றுக் கடையில்லேகூற்றுவனே வந்தாலும் குடறுக்கும் சாப்பாட்டைப் போட்டவனைக் கொல்லுகின்ற பூசுரர்கள் ஆங்கில்லை. நாட்டில் நல்லவரே நாயகர் ஆனதல்ை ஏட்டுச் சட்டமிலை எரிக்கும் திட்டமிலே, செயலே சட்டமதாய் சிறந்தால் ஆட்சியிலே செயலை எரிப்பது யார்? சிந்தையை எரிப்பார் யார்? அங்கும் படையுண்டு ஐந்தாம் படையல்ல ஆண்மையின் அடிப்படையில் ஆத்மிகப் படையுண்டு! மங்கா மறவர்களின் மானப் படைவலிமை கேட்டதும் எதிரிகளின் குடியின் குலையதிரும்! xxxvi