படப்பிடிப்பு: தொடர்பன்.
" திரு. வி. க., சோமசுந்தர பாரதியார், பெரியார் ஈ. வெ. ரா., சேதுப்பிள்ளை, ஒளவை துரைசாமி, கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணாதுரை, முத்துராமலிங்கத் தேவர், ஜீவானந்தம், சிவஞானம் ஆகிய பத்துப் பேச்சாளர்களின் சொல்லாற்றலை நிரல் நிரலே கிளந்து கூறும் அறிய நூல். கருத்தில் தெளிவு-சொல்லில் எளிமை-நடையில் கவர்ச்சி மூன்றும் இப் புத்தகத்தின் சிறப்பியல்புகள். தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய புத்தகம் இது,"
"மற்ற ஆசிரியர்களைப் போலன்றி தமிழகத்தில் சிறந்த பேச்சாளர்களில் பத்துப் பேரைப் பொறுக்கி எடுத்து எழுதி யிருப்பது, ' தொடர்பனு 'டைய திறமையையே குறிக்கிறது. இப்புத்தகம் தமிழ் நாட்டிற்கு மிக அவசியம். தமிழர்கள் கட்சி வித்தியாசமின்றி வாங்கிப் படிக்க வேண்டியது அவசியம்."
"கடினமான வேலையைத்தொட்டிருக்கிறார் தொடர்பன். தமிழகத்தின் பேச்சாளர்களில் பத்துப் பேருடைய சொற் கட்டுகளை எல்லோருடைய பார்வைக்கும் அவிழ்த்து விட்டிருக்கிறார், அனுபவிக்க முடிகிறது."
"ஒவ்வொருவரிடமும் உள்ள குறைகளையும் குணங்களையும் ஆசிரியர் பாரபட்சமின்றி எடுத்துக் கூறியிருக்கிறார்.”