பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 35 தலைப்புக் கேற்றக் கருத்துக்களைத் தெளிவாகத் தர வேண்டும் கூறும் அறிவுரையை குழப்பமில்லாமல் சொல்ல வேண்டும். குழந்தைகளின் கற்பனேக்குத் தூண்டு கோலாக, அவர் கள் உற்சாகத்திற்கு உணவாக உழைப்பை நோகக மாக்கும் நினைவாக, நூல் அமைய வேண்டும். தேவையான இடங்களில் சிறப்பான, உயிரோட்டமுள்ள ஓவியங்களே அச்சிட்டு , படிப்பவர்களுக்கு ஒர் ஆனந்த நிலையை உண்டு பண்ண வேண்டும் கதை நிகழ்ச்சி நடக் கின்ற இடங்களே கற்பனை செய்து கொண்டே படிக்கின்ற வாசகர்களுக்கு அச்சித்திரங்கள் உற்சாகத்தை அளிக்கும். H. அச்சிடும் காகிதம் வெண்மையாகவும், அச்சிடும் எழுத்துக்கள் ஓரளவு பெரிதாக இருந்தால், கண்களு கு வவியும் எரிச்சலும் ஏற்படாமல் இருக்கும். அச்சிடும் முறையில் அழகினச் சேர்ப்பது புத்தகத்திற்குக் கவர்ச்சியைத் தருவதாகும். கண்ணுடித் தாையிலே கல்லே வைப்பது போன்ற கவனம், பதிப்ப சிரியருக்கு இருப்பது மிகமிக முக்கியம். எதையாவது எழுதி, எவ்வாருே பதிப் பித்துவிட்டு, எப்படியோ விற்று விடலாம் என்பது முக்கியமல்ல. "இந்த ஒரு புத்தகத்தால் எத்தனே நெஞ்சங்கள் பயன் பெறும், எத்தனே இதயங் ள்ை அழிவுறும்’ என் ப தை ஒரு நூல் உருவாவதற்கு முன்னர், ஒராயிரம் முறை சிந்த ைசெய்வது இன்றியமையாத கடமையாகும். இறுதியில் ஒன்று. நம் நாட்டு இளைஞர்களே அறிவிலும் ஆற்றலிலும் அவனியலே முதன்மை பெற்று விளங்க, நமக்குக் கிடைத்த ஒரு புனித வாய்ப்பு எனறு பதிப்பாசிரியர்கள் நினைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன.