பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை ஒவியங்கள் 1 - பதுரை மாநகரம் என்ற பெயர் என்றும் பெருமைக்கு உரிய பெயர்; அன்றும் சரி, இன்றும் சரி, அது மாநகரந்தான். தமிழர் சரித்திரத்தைக் காண வேண்டுமானல் மதுரையின் சரித்திரத்தைப் படித் தாலே போதும். தமிழர் வளர்த்த கலேகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானுல் மதுரையிலே தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் பக்தி ஓங்கி வளர்ந்து நிற்கும் வரலாற்றுக்கு மதுரை ஒரு தனித் தம்பம் போன்ற அடையாளம். தமிழ்மொழி வளரும் தாயகம் மதுரை. மணிவாசகர் வளர்ந்து மதி மந்திரியாக வாழ்ந்து இறைவன் திருவருளே வெளிப்படுத்தியது மதுரை. சரித்திர வரலாற்றில் பல இடங்களில் தன் பெயரைத் தோற்றிக்கொண்டு விளங்குவது மதுரை. தமிழ் இலக்கியத்தில் ஒளி விளக்காகச் சுடர்வது மதுரை. “உலகத்தை ஒரு தராசிலிட்டு மதுரையை மற்ருெரு தராசில் இட்டால் மதுரைதான் கனம் மிகுதியாகக் காட்டும்’ என்று சங்கப் பரிபாடலில் ஒரு பாடல் உண்டு. தமிழர் நாகரிக மேம்பாடு விளைந்த நிலம் மதுரை; பக்திப் பயிர் விளைந்த ஊர் மதுரை; இலக்கிய வளம் விளைந்த நகர் மதுரை. தமிழையே மதுரைக்குரிய தமிழ் என்று பழம்புலவர் பாடுகிருர்; 'தண்டாரான் கூடல் தமிழ்” என்பது அவர் கூற்று.