பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏட்டில் ஏறிய வாசகம், 341 எழுதிடும் வேலை ஆமேல் இருப்பவன் இயற்றப் போக்கி எழுதுதல் இல்லா நூல்சொற்று இனிதமர் தருமா தேவை எழுதெழு தெனப்பல் பாச்சொற்று இயைதரப் பெயரும் ஈற்றில் எழுதிடச் செய்த கோமான் இணையடி முடிமேல் வைப்பாம். பூமேல் இருப்பவன்-பிரமதேவன். எழுதிடும் வேலை என்றது ஜீவர்களின் தலையில் நான்முகன் எழுதுவதை போக்கி திட்டம் செய்து எழுதுதல் இல்லா நூல் - வேதம். மாதேவை - மகாதேவனே. பல் பாச் சொற்று - பல பாடல்களைச் சொல்லி. இன அடி இரண்டு திருவடிகளே.) திருவாசகத்தைச் சொல்லும் கோலத்தில் மாணிக்கவாசகரை உருவாக்கிய சிற்பி, எழுதும் கோலத்தில் அழகிய திருச்சிற்றம்பலவாணனேயும் உருவமைத்திருக்கலாம். ஆனல் அப்படி அமைந்த திருவுருவம் ஒன்றும் இங்கே காணவில்லை. . கோயிலுக்கு உள்ளே பீடமே பூஜைக்குரியதாக விளங்குகிறது. அதற்குப் பின்னுல் சுவரையொட்டி இரண்டு மூலையில் இரண்டு திருவுருவங்கள் நின்ற கோலத்தில் இருக்கின்றன, இடப் பக்கத்திலுள்ளது மாணிக்கவாசகர் உருவம். வலப் பக்கத்தே ( தரிசிப் பவர்களுக்கு) உள்ளது அந்தணகை வந்த அழகிய