பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 வாருங்கள்.பார்க்கலாம் இருப்பது. இன்னும் பல சிவனடியார்கள் திருவாசக ஏட்டைப் பூசித்து வருகிறர்கள். செட்டிநாட்டில் உள்ள ஓர் அன்பர் சமீபத்தில் திருவாசகத்தை வெள்ளி ஏடுகளில் எழுதி வைத்துப் பூசித்து வரு கிருர். இத்தகைய பெருமை மற்ற நூல்களுக்கு இதற்குக் காரணம் சிவபெருமானே திரு வாசகத்தை ஏட்டில் எழுதினன் என்ற எண்ணமாக இருக்கலாம். அந்த நினைவிஞல் திருவாசக ஏட்டைப் பூஜையில் வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி அதை முதலில் செய்து வழிகாட்டிய பெரியார் ரீ அம்பலத்தாடுவாராக இருக்கலாம். அவர் தோற்றுவித்த இந்த வழி பாட்டை மிக முக்கியமான கடமையாக அவர் வழி வந்த மடாதிபதிகள் மேற்கொண்டிருக்கிருர்கள். அதனேக் கண்டு மற்ற அடியார்களும் திருவாசக ஏட்டுப் பூஜையை மேற்கொண்டிருக்கலாம். - இது ஊகமேயொழிய இப்படித்தான் நடந்தது. என்று உறுதியாகச் சொல்ல இயலாது. தமிழ் நாட்டில் திருவாசகம் எழுதிய ஏட்டுக்கு எத்தனை பெருமை கொடுத்திருக்கிருர்கள்! திருவாச கம் தமிழர் உள்ளத்தில் மிகமிக ஆழமாகப் பதிந்த நூல் என்பதையே இந்த வரலாறுகள் எல்லாம் காட்டுகின்றன. மாணிக்கவாசகர் தில்லேயில் ஒளியூடே கலந் தார். அவருடைய அருளமுத வாக்காகிய திருவாசகம் இறைவன் எழுதிய நூலாக, பூசிக்கும் ஏடாக மக்கள்