அதிமதுரக் காவியத்தால் அத்தனை பே
ரையுந்துக்கி அடித்தான் கம்பன். இதுவரையில் செயங்கொண்டான் பரணியினை
வெல்லும் நூல் எழுந்த தில்லை. கதைவழியில் புதுவழியைத் தமிழர்க்குக்
காட்டியவர் கல்கி என்ருல் ; புதியநடை, புதியவழி, சிறுகதையில் புகுத்தியவர் புதுமைப் பித்தன்.
முத்தனுக்குப் பின்மு னியன் உழுதுபயிர்
செய்வதுபோல் முதிர்ந்த கல்விப் பித்தனுக்குப் பின்வந்து சிறுகதைகள் பயிர்செய்யும் பெரியோன் தந்த இத்திரப்பெண் திருமதிசிற் றம்பலத்தை
நான்தொட்டுச் சிலிர்த்தேன் ! நல்ல புத்தகத்தை ஏழெட்டு முறைபடிப்பேன் ;
அவ்வாறே புரட்டிப் பார்த்தேன்.
திறன்தோய்ந்த சிந்தனையால், தேன்தோய்ந்த தலைப்புகளால், செழித்த சொல்லால், சிறந்தோங்கும் சிறுகதைகள் பல எழுதிப்
பரிசுபெற்ற திறமை யாளர் அறந்தாங்கிப் பூவை நகர் எழுத்தாளர்
ஆறுமுகம் அவர்கள் ; வேங்கை மறம்தாங்கும் வீரர்விழி போற்சிறந்த சிறுதைகள் வழங்கி யுள்ளார்.
12