மிஞ்சுபுகழ் மாயூரம் முனிசிப் பாட்டும் ;
விதிவகுத்த வடலூரார் பெய்த பாட்டும் : செஞ்சிநகர் ஏகாம்பர முதலி யாரின்
சீர்திருத்தக் கும்மிகளும் ; சந்தப் பாட்டும் ; பஞ்சுபடும் பாடுபட்ட சுப்ர மண்ய
பாரதியின் பாடல்களும் ; பாவின் வேந்தர் கொஞ்சு:தமிழ்ப் பாடல்களும்; இந்த நாட்டின்
கூனலுக்கு மருத்துவமாம் ; நல்ல தீர்ப்பாம் !
பிட்டுக்கு மண்சுமந்த கதையும் ; தெய்வம்
பிரம் பொன்ருல் அடிபட்ட கதையும் , யாப்பாம் கட்டுக்குள் அடங்குவதால், பழமை பேசும்
காவியத்தால் நமக்கென்ன நன்மை ? நீண்ட நெட்டிக்கு நாம்பூசும் புதிய சாயம்
நீடித்தா நிலைத்திருக்கும் மலடிப் பாடல் பட்டுப்போய்க் கெட்டுப்போய் விடுமே யன்றிப்
பாராட்டோ செல்வாக்கோ பெறுவ தில்லை.
பாவேந்தன் குடிசையிலே குடியி ருப்பான்.
பாட்டிருக்கும் , அவ்ன்கரத்தில் சீட்டி ருக்கும். கோவேந்தன் கோட்டையிலே குடியி ருப்பான்.
கோலிருக்கும் ; அவன்கரத்தில் வேலி ருக்கும். மூவேந்தன் எனுமிந்தக் கவிஞர் கையில்
முனைமுறியா வேவில்லை எனினும், என்றும் நாவேந்தும் தமிழுண்டு வீர முண்டு !
நன்ருகக் கவியெழுதும் ஆற்ற லுண்டு.
17