இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தஞ்சை நகர்செல்வ ராசன்-சுவை
தங்கிய செந்தமிழ் நேசன் ; கஞ்சி எழுத்தாளர் அல்லர்-வெறும்
காதல் எழுத்தாளர் அல்லர் ; அஞ்சும் எழுத்தாளர் அல்லர் -தமிழ்
ஆசை எழுத்தாளர் கண்டீர் ! செஞ்சொல் எழுத்தவர் பாதை-பிணிை
தீர்க்கும் மருத்துவ மேதை.
கொக்கு விரிக்கும் இறக்கை-நிறம்
கொண்ட மலர்பல உண்டு ! திக்கில் திரிந்திடும் வண்டு-தொடும்
சித்திர நீலங்கள் உண்டு ; பக்கம் இருக்கும் மரத்தின்-இலைப்
பந்தலில் பொன்மலர் உண்டு : மக்கள் குளிக்கும் குளத்தில்-தமிழ் மங்கலத் தாமரை உண்டு.
கரிய நிறக்கடல் போலே-சிலர்
கண்விழி வட்டம் இருக்கும்.
நரியின் தலையினைப் போலே-தமிழ்
நாட்டின் வெள வால்தலை கண்டீர் !
குருதி நிறைந்த இதயம்-அது
கூம்பிய தாமரை மொட்டாம் !
அரிய உறுப்பாம் இதயம்-அதை
ஆராய்ந்து சொன்னவன் ஹார்வி.
21 2767–2